Showing posts with label tamil catholic songs. Show all posts
Showing posts with label tamil catholic songs. Show all posts

needhaane iraivaa

நீதானே இறைவா நிலையான சொந்தம் 
உனையன்றி உலகில் எனக்கேது பந்தம் 
உன்னருள் ஒன்றே எனக்கு தஞ்சம் 
உனை என்றும் பிரியாது ஏழை (என்) நெஞ்சம் 
நீயே சொந்தம் நீயே தஞ்சம் நீயே செல்வம் வாழ்வின் மையம் 

கொடியோடு இணைந்துள்ள கிளை போலவே 
உன்னோடு ஒன்றாகும் அருள் வேண்டுமே  -- (2)
கனி தந்து என் வாழ்வு செழிப்பாகவே (2)
வருவாயே தலைவா என் உயிர் மூச்சிலே (2) -- (நீயே சொந்தம்...)

நிலைவாழ்வு தருகின்ற வார்த்தைகளோ 
இறைமைந்தன் உன்னிடமே இருக்கின்றன -- (2)
நானெங்கு போவது உனை பிரிந்து (2)
வாழ்வெல்லாம் வருவேன் உனை தொடர்ந்து (2) -- (நீயே சொந்தம் ...)

needhaane iraivaa nilaiyaana sondham
unaiyandri ulagil enakaedhu bandham
unnarul ondre enaku thanjam
unai endrum piriyaadhu aezhai en nenjam
neeye sondham neeye thanjam neeye selvam vaazhvin maiyam

kodiyodu inainthulla kilai polave
unnodu ondraagum arul vendume
kani thanthu en vaazhvu sezhipaagave
varuvaaye thalaivaa en uyir moochile

nilaivaazhvu tharugindra vaarthaigalo
iraimainthan unnidame irukkindrana
naanengu povadhu unai pirindhu
vaazhvellaam varuven unai thodarndhu

dhinam oru varam vaendum

தினம் ஒரு வரம் வேண்டும்
தீர்க்கமாய் தினம் வேண்டும்
தீங்கில்லா உளம் வேண்டும்
தீர்ப்பிடாத மனம் வேண்டும் இயேசுவே 
கேட்கிறேன் தேடுகிறேன் தட்டுகிறேன் தெய்வமே 
 
கடுகளவு விசுவாசம் தேவை என்று ஓடி வந்தேன்
கரையாத கல்மனமும் கரைந்திட காத்திருந்தேன் 
இனி இறைவார்த்தை விதையாகி இறைவாழ்வு பயிராகி 
குறைவில்லா நிறைவாழ்வு நிறைவாக தினம் பெறவே 
கேட்கிறேன் தேடுகிறேன் தட்டுகிறேன் தெய்வமே 
 
பறவைகள் பகிர்வது போல் மரங்கள் கனி தருவது போல் 
மேகம் மழை பொழிவது போல் நிலவு ஒளி தருவது போல் 
இனி இரக்கத்தால் இறைமகனாய் நீதியால் பண்பாளராய்
உண்மையாய் வாழ்ந்திடவே உணர்ந்து உயிர் வாழ்ந்திடவே 
கேட்கிறேன் தேடுகிறேன் தட்டுகிறேன் தெய்வமே 
 
dhinam oru varam vaendum
theerkamaay dhinam vaendum
theengilaa ulam vaendum
theerpidaatha manam vaendum yesuve
ketkiren thedugiren thattugiren dheiyvame
 
kadukalavu visuvaasam thevai endru oodi vanthen
karaiyaadha kal manamum karainthida kaathirunthen
ini iraivaarthai vidhaiyaagi iraivaazhvu payiraagi
kiraivilla niraivaazhvu niravaaga dhinam perave
ketkiren thedugiren thattugiren dheiyvame
 
paravaigal pagirvathu pol marangal kani tharuvadhu pol
megam mazhai pozhivathu pol nilavu oli tharuvadhu pol
ini irakkathaal iraimaganaay needhiyaal panpaalaraay
unmaiyaay vaazhnthidave unarndhu uyir vaazhnthidave
ketkiren thedugiren thattugiren dheiyvame

en thedal nee

என் தேடல் நீ என் தெய்வமே 
நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுமே 
உனை மனம் தேடுதே நீர் வழி காட்டுமே 

இறைவா இறைவா வருவாய் இங்கே 
இதயம் அருகில் அமர்வாய் இன்றே 

ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும் 
நீயின்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும் 
பிறர் அன்பை உன் பணியில் நான் ஏற்கையில் 
உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும் 
இறைவார்த்தையில் நிறைவாகுவேன் 
மறைவாழ்விலே நிலையாகுவேன் 
வழி தேடும் எனை  காக்க நீ வேண்டுமே -- (இறைவா இறைவா)

உன்னோடு நான் காணும் உறவானது 
உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும் 
பலியான உன்னை நானும் தினம் ஏற்கையில் 
எளியேனில் உன் வாழ்வு ஒளியாகிடும் 
உன் மீட்டலால் எனில் மாற்றங்கள் 
உன் தேடலால் எனில் ஆற்றல்கள் 
வழி தேடும் எனை  காக்க நீ வேண்டுமே -- (இறைவா இறைவா)

en thedal nee en dheiyvame
neeyindri en vaazhvu niram maarudhe
unai manam theduthe neer vazhi kaatume 

iraivaa iraivaa varuvaay inge
idhayam arugil amarvaay indrae

oru kodi vinmeengal dhinam thondrinum
neeyindri en vaazhvu irul soozhthidum
pirar anbai un paniyil naan aerkaiyil
un anbu uyir thandhu vaazhvaagidum
iraivaarthaiyil niraivaaguven
maraivaazhvile nilaiyaaguven
vazhi thedum enai kaaka nee vendume -- (iraivaa iraivaa)

unnodu naan kaanum uravaanadhu
ullathai urumaatri unathaakidum
paliyaana unai naanum thinam aerkayil
eliyenil un vaazhvu oliyaagidum
un meetalaal enil maatrangal
un thedalaal enil aatralgal
vazhi thedum enai kaaka nee vendume -- (iraivaa iraivaa)

vaazhvaaga neeyaaga

வாழ்வாக நீயாக வேண்டும் இறைவா இறைவா 
நீயாக நான் மாற வேண்டும் இறைவா நீயாக நான் மாற வேண்டும்

அலையாய் ஓயாமல்  உனை தொட வந்தேன் 
கனிவாய் எனை நீ அரவணைத்திருந்தாய் -- (2)
வறண்ட நிலமாக நான் காத்திருந்தேன் 
வாழ்வின் மழையாய் இதயம் சேர்ந்தாய் 
தாய் தந்தை மறந்தாலும் நீ என்னை மறவாமல் (2)
தேடி வந்தாய் புதுவாழ்வு தந்தாய் 

இறைவா உம அன்பு உயிரினும் உயர்ந்தது 
உன் புகழ் எந்நாளும் என் நாவில் ஒலிக்கும் -- (2)
உந்தன் பெயர் சொல்லி என் கரம் உயரும் 
நெஞ்சம் நிறையும் உந்தன் விருந்தால்
தாய் தந்தை மறந்தாலும் நீ என்னை மறவாமல் (2)
தேடி வந்தாய் புதுவாழ்வு தந்தாய் 

vaazhvaaga neeyaaga vaendum iraivaa iraivaa
neeyaaga naan maara vaendum iraivaa neeyaaga naan maara vaendum

alaiyaay oyaamal unai thoda vanthen
kanivaay enai nee aravanaithirunthaay --(2)
varanda nilamaaga naan kaathirundhen
vaazhvin mazhaiyaay idhayam saernthaay
thaay thanthai maranthaalum nee ennai maravaamal (2)
thedi vanthaay pudhu vaazhvu thanthaay

iraivaa um anbu uyirinum uyarnthathu
un pugazh enaalum en naavil olikkum -- (2)
undhan peyar solli en karam uyarum
nenjam niraiyum undhan virunthaal
thaay thanthai maranthaalum nee ennai maravaamal (2)
thedi vanthaay pudhu vaazhvu thanthaay

deepathin oliyinil

தீபத்தின் ஒளியினில் இணைவோம் 
திருப்பலி செலுத்திட விரைவோம்
புனிதம் மலர்ந்திட மனிதம் மகிழ்ந்திட 

நல் வாழ்வின் தீபங்களாய் இங்கு நாளெல்லாம் ஒளிர வாருங்களேன் 
நம் வாழ்வின் தேவைகளை தினம் நல்லோர்க்கு இயேசு தந்திடுவார்
அவரின் இல்லம் தினம் வந்தால் நம் உள்ளங்கள் ஒளியால் நிறைந்திடுமே 
அன்பு செய்யும் உள்ளங்களே இறைவனின் அருள் பெரும் இல்லங்களே 

இயேசுவோடு நாம் நடந்தால் என்றும் நம் வாழ்வில் தோல்விக்கு இடம் இல்லையே 
நன்மை செய்து நீ முயன்றால் இங்கு உண்மை ஒளி உனக்கு கிடைத்திடுமே 
வார்த்தை இங்கு மனுவானார் நம் வாழ்வினில் என்றும் குடி கொண்டார் 
அன்பு செய்யும் உள்ளங்களே இறைவனின் அருள் பெரும் இல்லங்களே 

deepathin oliyinil inaivom thiruppali seluthida viraivom
punidham malardhida manidham magizhnthida

nalvaazhin dheepangalaai ingu nalelaam olira vaarungalaen
nam vaazhvin thevaigalai thinam nalorku yesu thandhiduvaar
avarin illam thinam vanthaal nam ullangal oliyaal nirainthidume
anbu seyyum ullangalae iraivanin arul perum illangalae

yesuvodu naam nadanthaal endrum nam vaazhvil tholvikku idam illayae
nanmai seythu nee muyandraal ingu unmai oli unakku kidaithidume
vaarththai ingu manuvaanaar nam vaazhvinil endrum kudi kondaar
anbu seyyum ullangalae iraivanin arul perum illangalae



nilayilla ulagu

நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு 
நிலையானதொன்றும் இங்கில்லை
நேற்றும் இன்றும் என்றும் மாறாத தெய்வம் 
நீ மட்டும் போதும் எப்போதும் 
நீ மட்டும் போதும் நீ மட்டும் போதும் நீ மட்டும் போதும் எப்போதும் 

ஆசையில் பிறந்து ஆணவத்தில் தொடர்ந்து 
ஆடி இங்கு அடங்குது வாழ்க்கை 
வாழ்வு தரும் வார்த்தை வாழ்க்கை தனை வளர்த்தால் 
வசந்தம் வந்து நம்மில் என்றும் தங்கும் 
நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும் நீ மட்டும் போதும் எப்போதும் 

பொய்மையிலே விழுந்து போலியாக நடந்து 
பொழுதிங்கு போகுது கழிந்து 
உண்மைதனை உணர்ந்து உறுதியாக எழுந்தால் 
ஊதியங்கள் தேவையில்லை நமக்கு
நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும் நீ மட்டும் போதும் எப்போதும் 

nilayilla ulagu nijamilla uravu
nilayaanadhondrum ingillai
netrum indrum endrum maaraadha dheiyvam 
nee mattum podhum epodhum
nee mattum podhum nee mattum podhum nee mattum podhum eppodhum

aasaiyile piranthu aanavathil thodarnthu
aadi ingu adanguthu vazhkkai
vaazhvu tharum vaarthai vaazhkai thanai valarthaal
vasantham vanthu nammil endrum thangum
nee mattum podhum en vaazhvu maarum nee matttum podhum eppodhum

poymaiyile vizhundhu poliyaaga nadandhu
pozhuthingu poguthu kazhinthu
unmaithanai unarthu uruthiyaaga vaazhnthaal
oothiyangal thevaiyillai namakku
nee mattum podhum en vaazhvu maarum nee matttum podhum eppodhum

ennai sumappathanaal

என்னை சுமப்பதனால் இறைவா உன் சிறகுகள் முறிவதில்லை
அள்ளி அணைப்பதனால் இறைவா அன்பு குறைவதில்லை

ஆயிரம் மின்னல் இடித்திட்ட போதும் வானம் கிழிவதில்லை
ஆயிரம் மயில்கள் நடந்திட்ட போதும் நதிகள் அழுவதில்லை

கருவை சுமக்கும் தாய்க்கு என்றும் குழந்தை சுமையில்லை
கருவிழி சுமக்கும் இருவிழி அதற்கு இமைகள் சுமையில்லை
மதுவை சுமக்கும் மலர்களுக்கென்றும் பனித்துளி சுமையில்லை
வானை சுமக்கும் மேகத்துக்கென்றும் மழைத்துளி சுமையில்லை

அகழும் மனிதரை தாங்கும் பூமிக்கு முட்கள் சுமையில்லை
இகழும் மனிதரில் இறங்கும் மனதிற்கு சிலுவைகள் சுமையில்லை

உலகின் பாரம் சுமக்கும் தோள்களில் நானொரு சுமையில்லை
உயிரை ஈயுமுன் சிறகின் நிழலில் என் இதயம் சுமையில்லை 

ennai sumapathanaal iraiva un siragugal murivathillai
alli anaipathanaal iraiva un anbu kuraivathillai
aayiram minnal idithita podhum vaanam kizhivathillai
aayiram mayilgal nadanthitta podhum nadhigal azhuvathillai

karuvai sumakkum thaayku endrum kuzhanthai sumaiyillai
karuvizhi sumakkum iruvizhi adharku imaigal sumaiyillai
madhuvai sumakkum malargalukendrum panithuli sumaiyillai
vaanai sumakkum megathukendrum mazhaithuli sumaiyillai

agazhum manitharai thaangum boomikku mutkal sumaiyillai
igazhum manitharil irangum manathirku siluvaigal sumaiyillai
ulagin baaram sumakkum tholgalil naanoru sumaiyillai
uyirai iiyumun siragin nizhalil en idhayam sumaiyillai

thaayaga anbu seyyum

தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா 
சேயாக நம்பி வந்தோம் வாழ்வில் ஒளி ஏற்றவா 
கொஞ்சும் தமிழ் மொழி பேசி என்னை தேற்றவே (2)
பிஞ்சு நெஞ்சம் அழைக்குது வருவாய் தேவா (2)

உன் அன்பு சாரலில் நனைந்தாலே போதும் இன்னல்கள் நீங்கிடுமே 
உன் ஸ்வாச காற்றில் கலந்தாலே போதும் விண்வாசல் அடைந்திடுவேன் 
நான் என்றும் உன் சாயல் தானே 
உன் கோவில் குடி கொள்ள நீ வா 

உன் பாச நரம்பில் இணைந்தாலே போதும் சுக ராகம் மீட்டிடுவேன் 
உன் வார்த்தை கடலில் மிதந்தாலே போதும்  யுகம் பல படைத்திடுவேன் 
எல்லாமே நீதானே இறைவா 
என்னுள்ள நிறைவாக நீ வா
 
thaayaaga anbu seyyum ennuyir neethaanayya
seyaaga nambi vandhom vaazhvil oli aetravaa
konjum thamizh mozhi pesi enai thaetrave (2)
pinju nenjam azhaikkudhu varuvaay deva (2)

un anbu saaralil nanainthale podhum innalgal neengidume
un swaasa kaatril kalanthaale podhum vinvaasal adainthiduven
naan endrum un saayal thaane
un kovil kudi kolla nee vaa
 
un paasa narambil inainthaale podhum suga raagam 
un vaarthai kadalil mithanthaale podhum yugam pala padaithiduven
ellame nee thaane iraivaa
ennulla niraivaaga nee vaa
 

deva undhan paliyaaga

தேவா உந்தன் பலியாக என்னை தந்தேன்
என்றும் எந்தன் பணிவாழ்வை ஏற்றிடுவாய்

அன்பொன்றே தினம் அலைகின்ற நெஞ்சங்கள் வீதியில் ஆயிரமே
அரவணைக்கும் கரம் தேடி ஆர்வமுடன் காத்திருக்கும் மனிதர்கள் கூட்டம் இங்கே
அன்போடு நான் வாழுவேன்
சிந்தும் கண்ணீரை நான் மாற்றுவேன்
நல்லன்பை தேடும் புவிமாந்தர் வாழ என் வாழ்வை பலியாக்குவேன்

விடியாதா பொழுதென்று வீங்கிடும் விழியோடு ஏங்கிடும் மாந்தர் இங்கே
முடியாது என்றெண்ணி முகம் சோர்ந்து போகும் பரிதாப வாழ்க்கை இங்கே
தேவா நான் சுடராகுவேன்
எங்கும் நம்பிக்கை ஒளி ஏற்றுவேன்
போராடும் நெஞ்சில் போராட்டம் நீக்க என் வாழ்வை பலியாக்குவேன்
என் வாழ்வை பலியாக்குவேன்


deva undhan paliyaaga ennai thanthen
endrum enthan panivaazhvai aetriduvaay

anbondre thinam thedi alaigindra nenjangal veedhiyil aayirame
aravanaikkum karam thedi aarvamudan kaathirukkum manidhargal koottam inge
anbodu naan vaazhuven
sindhum kaneerai naan maatruven
nallanbai thedum puvimaanthar vaazha en vaazhvai paliyaakkuven
en vaazhvai paliyaakkuven

vidiyaadha pozhuthendru veengidum vizhiyodu aengidum maanthar inge
mudiyaadhu endrenni mugam sornthu pogindra paridhaaba vaazhkai inge
deva naan sudaraaguven
engum nambikkai oli aetruven
poraadum nenjil poraatam neenga en vaazhvai paliyaakkuven
en vaazhvai paliyakkkuven

padaithathellaam thara vandhom

படைத்ததெல்லாம் தர வந்தோம் 
பரம்பொருளே உன் திருவடியில் 
உன் நினைவு எல்லாம் பெயர் சொல்லும் 
என் வாழ்வினிலே ஒளி வீசும் 

உழைப்பினில் கிடைத்திட்ட பொருள் எல்லாம் 
உன்னதரே உந்தன் மகிமைக்கே 
தந்தையே தயவுடன் ஏற்றிடுவாய் 
தாழ்ந்து பணிந்து தருகின்றோம் 

வாழ்வினில் வருகின்ற புகழ் எல்லாம் 
வல்லவரே உந்தன் மாட்சிமைக்கே 
கருணையின் தலைவா ஏற்றிடுவாய் 
கனிவாய் உவந்து தருகின்றோம்

padaithathellaam thara vandhom 
paramporule un thiruvadiyil
un ninaivu ellam peyar sollum
en vaazhvinile oli veesum

uzhaippinil kidaithitta porul ellam
unnathare unthan magimaikae
thanthaye thayavudan aetriduvaay
thaazhnthu paninthu tharugindrom 

vaazhvinil varugindra pugazh ellam
vallavare unthan maatchimaikae
karunaiyin thalaivaa aetriduvaay
kanivaay uvanthu tharugindrom

vanthom thanthidave

வந்தோம் தந்திடவே தந்தாய் ஏற்றிடுவாய் 
எம் வாழ்வை உமக்கே பலியாய் தந்தோம் அன்பாய் ஏற்றிடுவாய் 

இறைவா உன்னில் இணையா வாழ்வு இருந்தும் பயனென்ன 
இகத்தில்  நீ தந்த வாழ்வை தந்தால் எனக்கு இழப்பென்ன 
இனிவாழும் காலம் இனிதாக வேண்டும் இறைவா உன்னோடு இணைந்ததாக வேண்டும் 
இணைந்ததாக வேண்டும் 

இறைவா எந்தன் உள்ளம் என்றும் உன்னை தேடுதே 
உன்னில் இணைந்து உயர்வு பெறவே விரைந்து நாடுதே 
உன் நாமம் ஓங்க எந்நாளும் வாழ்ந்து இறைவா உன்னோடு இணைந்தாக வேண்டும் இணைந்தாக வேண்டும் 

vanthom thanthidave thanthaay aetriduvaay
em vaazhvai umakke baliyaay thanthom 
anbaay aetriduvaay

iraivaa unnil inaiyaa vaazhvu irundhum payanenna
igaththil nee thantha vaazhvai thanthaal enaku izhappenna
ini vaazhum kaalam inidhaaga vaendum iraivaa unnodu inainthaaga vendum
inainthaaga vendum

iraivaa enthan ullam endrum unnai thaeduthe
unnil inainthu uyarvu perave viranthu naaduthe
un naamam oonga ennaalum vaazhnthu iraivaa unnodu inainthaaga vendum
inainthaaga vendum

padaipu ellam umake sondham

படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம் 
நானும் உந்தன் கைவண்ணம் 
குயில்கள் பாடும் கிளிகள் பேசும் 
என் வாழ்வு இசைக்கும் உன் ராகமே 

இயற்கை உனது ஓவியம் 
இணையில்லாத காவியம் 
அகிலமென்னும் ஆலயம் 
நானும் அதில் ஓர் ஆகமம் 
உள்ளம் எந்தன் உள்ளம் அது 
எந்நாளும் உன் இல்லமே 

இதயம் என்னும் வீணையில் 
அன்பை மீட்டும் வேளையில் 
வசந்த ராகம் கேட்கவே 
ஏழை என்னில் வாருமே 
தந்தேன் என்னை தந்தேன் என்றும் 
என் வாழ்வு உன்னோடு தான் 

padaipu ellam umake sondham
naanum undhan kaivannam
kuyilkal paadum kilikal pesum
en vaazhvu isaikum un raagame

iyarkai unadhu ooviyam
inaiyillaadha kaaviyam
agilamennum aalayam
naanum adhil oor aagamam
ullam endhan ullam adhu
ennaalum un illame

idhayam ennum veenaiyil 
anbai meetum velaiyil
vasantha raagam kaetkave
aezhai ennil vaarume
thanthen ennai thanthen endrum
en vaazhvu unnodu dhaan

palipeedathil vaithen ennai

பலிபீடத்தில் வைத்தேன் என்னை 
பாவி என்னை ஏற்றுக் கொள்ளும் 

நிலையில்லா இந்த பூவுலகில் 
நித்தம் உன் பாதையிலே 
நின் சித்தம் போல் உம் கரத்தால் 
நித்தம் வழி நடத்தும் 

பரிசுத்தம் இல்லா இவ்வுலகில் 
பரிசுத்தமாய் ஜீவிக்க 
பரிசுத்தமான உம் இரத்தத்தால் 
பரிசுத்தமாக்கி விடும் 

palipeedathil vaithen ennai
paavi ennai aetru kollum

nilaiyila indha poovulagil
nitham un paathaiyile
nin sitham pol um karathaal
nitham vazhi nadathum

parisutham illaa ivvulagil
parisuthamaay jeevika
parisuthamaana um rathathaal
parisuthamaaki vidum

naangal tharugindra kaanikai

நாங்கள் தருகின்ற காணிக்கை இதை ஏற்றருள் தெய்வமே 
நாங்கள் தருகின்ற காணிக்கை 

நிலையற்ற உலகம் நிலையென நினைத்து
நிம்மதியின்றி வாழ்ந்து வந்தோம் 
கண்ணீர் பூக்களை உந்தன் பாதத்தில் 
காணிக்கையாக்கவே - இன்று 
உம்மை நாடினோம் 

வளமற்ற வாழ்வில் வசந்தத்தை தேடி 
பாவத்தை நாங்கள் அணிந்திருந்தோம் 
அன்பின் பாதத்தில் எந்தன் வாழ்வினை 
காணிக்கையாக்கவே - இன்று 
உம்மை நாடினோம் 

naangal tharugindra kaanikai idhai aetrarul dheyvame
naangal tharugindra kaanikai

nilaiyatra ulagam nilayena ninaithu nimmadhiyindri vaazhnthu vandhom
kaneer pookalai undhan paathathil kaanikai aakave indru ummai naadinom

valamatra vaazhvil vasanthathai thedi paavathai naangal aninthirunthom
anbin paathathil enthan vaazhvinai kaanikaiyaakkave indru ummai naadinom

dheiveega paliyil

தெய்வீக பலியில் உறவாடும் தெய்வமே 
உன்னோடு பலியாக நானும் இணைகின்றேன் 
காணிக்கை ஏற்றிடுவாய் 

வானம் காணும் ஒளியெல்லாம் என் தேவன் தந்த காணிக்கை 
மேகம் சிந்தும் துளியெல்லாம் என் தேவன் தந்த காணிக்கை 
இந்த நிலையில் எந்தன் வாழ்வை 
காணிக்கை தந்தேன் உன் மலர் பாதம் 

வேதம் சொன்ன மொழியெல்லாம் என் தேவன் தந்த காணிக்கை 
பாதம் படைத்த கனியெல்லாம் என் தேவன் தந்த காணிக்கை இந்த நினைவில் எந்தன் வாழ்வை 
காணிக்கை தந்தேன் உன் மலர் பாதம் 

dheiveega paliyil uravaadum dheyvame
unnodu paliyaaga naanum inaikindren
kaanikai aetriduvaay

vaanam kaanum oliyellaam en devan thantha kaanikai
megam sindhum thuliyellaam en devan thantha kaanikai
indha nilaiyil endhan vaazhvai
kaanikai thanthen un malar paadham

vedham sonna mozhiyellaam en devan thantha kaanikai
paadham padaitha kaniyellaam en devan thantha kaanikai
indha ninaivil endhan vaazhvai
kaanikai thanthen un malar paadham

tharuven kaanikai

தருவேன் காணிக்கை 
என்னை முழுமையாகவே - மனம் 
இங்கு மலராய் மலர்ந்து உன்னில் உயிராய் கலந்து 
தருவேன் உன்னன்பில் இணைந்து 

குறைகளால் நிறைந்த என் உள்ளக்கறை நீக்குமே 
இறைவா வருவாய் 
என்னுள்ளம் உன்னில்லம் அறிந்தேன் 
உள்ளத்திலே உள்ளதெல்லாம் உனக்காய் தினம் கொடுப்பேன் 

இரசத்துடன் நீர்த்துளிபோல் எனை சேர்த்து உம் இரத்தமாக்கும் 
அப்பத்தில் எழுவாய் 
மாற்றிடும் நல் திருவுணவாய் 
என்னிடத்தில் ஏதுமில்லை உன்னிடம் என்னை அளித்தேன் 

tharuven kaanikai
ennai muzhumaiyaagave - manam
ingu malaraay malarnthu unnil uyiraay kalanthu
tharuven unnanbil inainthu

kuraigalaal nirantha en ullakarai neekume
iraivaa varuvaay
ennullam unnillam arinthen
ullathile ullathellaam unakkaay thinam koduppen

rasathudan neerthulupol enai saerthu um rathamaakkum
appathil ezhuvaay
maatridum nal thiruvunavaay
ennidathil aedhumillai unnidam ennai alithen

thanthen thanthen iraiva

தந்தேன் தந்தேன் இறைவா
என்னை தந்தேன் தந்தேன் தலைவா 
உள்ளது எல்லாம் உமக்காக 
உயர் பலியானாய் எனக்காக 
அதில் எம்மையும் இணைத்திடவா 

இயற்கை அழகு உந்தன் எழில் வண்ணம் 
அங்கு இருக்கும் வளங்கள் 
உந்தன் அருள் கோலம் 
கண்டேன் கண்டேன் உந்தன் கருணை உள்ளம் 
தினம் வந்தேன் வந்தேன் உந்தன் மலர் பாதம் 
தயவுடன் என்னையும் ஏற்றிடுவாய் - உம் 
பலியாய் என்னையும் மாற்றிடுவாய் 

இதழ்கள் விரிக்கும் நம் மலர் கூட்டம் 
எங்கும் இறைவன் இருப்பதை பறைசாற்றும்
என்றும் இன்றும் என் இயேசு தேவா 
நீ தங்கும் தங்கும் உள்ளம் இறைவன் இல்லம்
காணிக்கை பொருளாய் நான் மாறி 
உன் காலடி வந்தே சரணடைந்தேன்

thanthen thanthen iraiva
ennai thanthen thanthen thalaivaa
ulladhu ellam umakkaaga
uyar paliyaanaay enakkaaga
adhil emmaiyum inaithidavaa

iyarkai azhagu undhan ezhil vannam
angu irukkum valangal
undhan arul kolam
kanden kanden undhan karunai ullam
dhinam vandhen vandhen undhan malar paadham
thayavudan ennaiyum aetriduvaay - um 
paliyaay ennaiyum maatriduvaay

idhazhgal virikkum nam malar koottam
engum iraivan iruppadhai paraisaatrum
endrum endrum en yesu deva
nee thangum thangum ullam iraivan illam
kaanikkai porulaay naan maari
un kaaladi vandhe saranadainthen

thanthita porutkal

தந்திட்ட பொருட்கள் யாவையும் எடுத்து 
தந்தோம் தந்தாய் ஏற்றிடுவாய் 

வழங்கிட கனியோ உணவோ இன்றி 
வாடிடும் வறியோர் பலர் இறைவா 
வெறும் விழிநீர் வியர்வை வேதனை அன்றி 
வேறேதும் இல்லா நிலை இறைவா 

உனக்கென எம்மை வழங்கிடும் வேளை 
உன்னருள் இவர்க்காய் கேட்கின்றோம் 
எங்கள் மனம்பொருள் ஆற்றல் அனைத்தையும் இவர் தம் 
மனத்துயர் நீங்கப் படைக்கின்றோம் 

thanthita porutkal yaavaiyum eduthu
thanthom thanthaay aetriduvaay

vazhangida kaniye unavo indri
vaadidum variyor palar iraiva
verum vizhineer viyarvai vedhanai andri
verethum illaa nilai iraiva

unakkena emmai vazhangidum velai
unnarul ivarkkaay ketkindrom
engal manamporum aatral anaithayum ivar tham
manathuyar neenga padaikindrom

kaiyalikkindren iraiva

கையளிக்கின்றேன் இறைவா - எந்தன் 
மெய்ப்பொருள் ஆவி அனைத்தையும் உமக்கு 
கையளிக்கின்றேன் இறைவா 

வாழ்க்கையை விட எந்தன் வளமையை விட உந்தன் 
அருள் நிலை ஒன்றே மேலானது 
வாழ்க்கையில் உம்மை வாழ்த்துவது - எல்லா 
வரங்களையும் விட மேலானது 

செழுமையும் கொழுமையும் பெறுவது போல் எந்தன் 
இதயமும் உமதுமுன் நிறைவு பெறும் 
முழுமை என் உள்ளமதை நிரம்பிடவே - நாவில் 
மகிழ்ச்சியின் புகழ்ச்சியின் பாடல் எழும் 

kaiyalikkindren iraiva - endhan
meiyporul aavi anaithaiyum umaku
kaiyalikkindren iraiva

vaazhkaiyai vida endhan valamaiyai vida undhan
arul nilai ondre melaanadhu
vaazhkaiyil ummai vaazhthuvadhu - ellaa
varangalaiyum vida melaanadhu

sezhumaiyum kozhumaiyum peruvadhu pol endhan
idhayamum umadhumun niraivu perum
muzhumai en ullmadhai nirappidave - naavil 
magizhchiyin pugazhchiyin paadal ezhum

ezhai ennai kaanikaiyaaga

ezhai ennai kaanikaiyaaga tharugindren dheyvame
aetru kollume aetru kollume

en uyirum udalum ullamum 
sindhanaiyum seyalum - en
unarvugal uravugal ennil 
ulla thiramaigal
yaavum undhan karunaiyin kodaigal 
thanthaay aetrukkol

en kadantha kaala vaazhkaiyum
nigazhum vaazhkkaiyum - naan
edhir kollum vaazhkkaiyum
adhan valarchi thalarchiyum
yaavum undhan karunaiyin kodaigal 
thanthaay aetrukkol 

ஏழை என்னை காணிக்கையாக தருகின்றேன் தெய்வமே 
ஏற்று கொள்ளுமே ஏற்று கொள்ளுமே 

என் உயிரும் உடலும் உள்ளமும் 
சிந்தனையும் செயலும் - என் 
உணர்வுகள் உறவுகள் என்னில் 
உள்ள திறமைகள்
யாவும் உந்தன் கருணையின் கொடைகள் 
தந்தாய் ஏற்றுக்கொள்

என் கடந்த கால வாழ்க்கையும் 
நிகழும் வாழ்க்கையும் - நான் 
எதிர் கொள்ளும் வாழ்க்கையும் 
அதன் வளர்ச்சி தளர்ச்சியும் 
யாவும் உந்தன் கருணையின் கொடைகள் 
தந்தாய் ஏற்றுக்கொள்