thaayaga anbu seyyum

தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா 
சேயாக நம்பி வந்தோம் வாழ்வில் ஒளி ஏற்றவா 
கொஞ்சும் தமிழ் மொழி பேசி என்னை தேற்றவே (2)
பிஞ்சு நெஞ்சம் அழைக்குது வருவாய் தேவா (2)

உன் அன்பு சாரலில் நனைந்தாலே போதும் இன்னல்கள் நீங்கிடுமே 
உன் ஸ்வாச காற்றில் கலந்தாலே போதும் விண்வாசல் அடைந்திடுவேன் 
நான் என்றும் உன் சாயல் தானே 
உன் கோவில் குடி கொள்ள நீ வா 

உன் பாச நரம்பில் இணைந்தாலே போதும் சுக ராகம் மீட்டிடுவேன் 
உன் வார்த்தை கடலில் மிதந்தாலே போதும்  யுகம் பல படைத்திடுவேன் 
எல்லாமே நீதானே இறைவா 
என்னுள்ள நிறைவாக நீ வா
 
thaayaaga anbu seyyum ennuyir neethaanayya
seyaaga nambi vandhom vaazhvil oli aetravaa
konjum thamizh mozhi pesi enai thaetrave (2)
pinju nenjam azhaikkudhu varuvaay deva (2)

un anbu saaralil nanainthale podhum innalgal neengidume
un swaasa kaatril kalanthaale podhum vinvaasal adainthiduven
naan endrum un saayal thaane
un kovil kudi kolla nee vaa
 
un paasa narambil inainthaale podhum suga raagam 
un vaarthai kadalil mithanthaale podhum yugam pala padaithiduven
ellame nee thaane iraivaa
ennulla niraivaaga nee vaa
 

deva undhan paliyaaga

தேவா உந்தன் பலியாக என்னை தந்தேன்
என்றும் எந்தன் பணிவாழ்வை ஏற்றிடுவாய்

அன்பொன்றே தினம் அலைகின்ற நெஞ்சங்கள் வீதியில் ஆயிரமே
அரவணைக்கும் கரம் தேடி ஆர்வமுடன் காத்திருக்கும் மனிதர்கள் கூட்டம் இங்கே
அன்போடு நான் வாழுவேன்
சிந்தும் கண்ணீரை நான் மாற்றுவேன்
நல்லன்பை தேடும் புவிமாந்தர் வாழ என் வாழ்வை பலியாக்குவேன்

விடியாதா பொழுதென்று வீங்கிடும் விழியோடு ஏங்கிடும் மாந்தர் இங்கே
முடியாது என்றெண்ணி முகம் சோர்ந்து போகும் பரிதாப வாழ்க்கை இங்கே
தேவா நான் சுடராகுவேன்
எங்கும் நம்பிக்கை ஒளி ஏற்றுவேன்
போராடும் நெஞ்சில் போராட்டம் நீக்க என் வாழ்வை பலியாக்குவேன்
என் வாழ்வை பலியாக்குவேன்


deva undhan paliyaaga ennai thanthen
endrum enthan panivaazhvai aetriduvaay

anbondre thinam thedi alaigindra nenjangal veedhiyil aayirame
aravanaikkum karam thedi aarvamudan kaathirukkum manidhargal koottam inge
anbodu naan vaazhuven
sindhum kaneerai naan maatruven
nallanbai thedum puvimaanthar vaazha en vaazhvai paliyaakkuven
en vaazhvai paliyaakkuven

vidiyaadha pozhuthendru veengidum vizhiyodu aengidum maanthar inge
mudiyaadhu endrenni mugam sornthu pogindra paridhaaba vaazhkai inge
deva naan sudaraaguven
engum nambikkai oli aetruven
poraadum nenjil poraatam neenga en vaazhvai paliyaakkuven
en vaazhvai paliyakkkuven

padaithathellaam thara vandhom

படைத்ததெல்லாம் தர வந்தோம் 
பரம்பொருளே உன் திருவடியில் 
உன் நினைவு எல்லாம் பெயர் சொல்லும் 
என் வாழ்வினிலே ஒளி வீசும் 

உழைப்பினில் கிடைத்திட்ட பொருள் எல்லாம் 
உன்னதரே உந்தன் மகிமைக்கே 
தந்தையே தயவுடன் ஏற்றிடுவாய் 
தாழ்ந்து பணிந்து தருகின்றோம் 

வாழ்வினில் வருகின்ற புகழ் எல்லாம் 
வல்லவரே உந்தன் மாட்சிமைக்கே 
கருணையின் தலைவா ஏற்றிடுவாய் 
கனிவாய் உவந்து தருகின்றோம்

padaithathellaam thara vandhom 
paramporule un thiruvadiyil
un ninaivu ellam peyar sollum
en vaazhvinile oli veesum

uzhaippinil kidaithitta porul ellam
unnathare unthan magimaikae
thanthaye thayavudan aetriduvaay
thaazhnthu paninthu tharugindrom 

vaazhvinil varugindra pugazh ellam
vallavare unthan maatchimaikae
karunaiyin thalaivaa aetriduvaay
kanivaay uvanthu tharugindrom

vanthom thanthidave

வந்தோம் தந்திடவே தந்தாய் ஏற்றிடுவாய் 
எம் வாழ்வை உமக்கே பலியாய் தந்தோம் அன்பாய் ஏற்றிடுவாய் 

இறைவா உன்னில் இணையா வாழ்வு இருந்தும் பயனென்ன 
இகத்தில்  நீ தந்த வாழ்வை தந்தால் எனக்கு இழப்பென்ன 
இனிவாழும் காலம் இனிதாக வேண்டும் இறைவா உன்னோடு இணைந்ததாக வேண்டும் 
இணைந்ததாக வேண்டும் 

இறைவா எந்தன் உள்ளம் என்றும் உன்னை தேடுதே 
உன்னில் இணைந்து உயர்வு பெறவே விரைந்து நாடுதே 
உன் நாமம் ஓங்க எந்நாளும் வாழ்ந்து இறைவா உன்னோடு இணைந்தாக வேண்டும் இணைந்தாக வேண்டும் 

vanthom thanthidave thanthaay aetriduvaay
em vaazhvai umakke baliyaay thanthom 
anbaay aetriduvaay

iraivaa unnil inaiyaa vaazhvu irundhum payanenna
igaththil nee thantha vaazhvai thanthaal enaku izhappenna
ini vaazhum kaalam inidhaaga vaendum iraivaa unnodu inainthaaga vendum
inainthaaga vendum

iraivaa enthan ullam endrum unnai thaeduthe
unnil inainthu uyarvu perave viranthu naaduthe
un naamam oonga ennaalum vaazhnthu iraivaa unnodu inainthaaga vendum
inainthaaga vendum

padaipu ellam umake sondham

படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம் 
நானும் உந்தன் கைவண்ணம் 
குயில்கள் பாடும் கிளிகள் பேசும் 
என் வாழ்வு இசைக்கும் உன் ராகமே 

இயற்கை உனது ஓவியம் 
இணையில்லாத காவியம் 
அகிலமென்னும் ஆலயம் 
நானும் அதில் ஓர் ஆகமம் 
உள்ளம் எந்தன் உள்ளம் அது 
எந்நாளும் உன் இல்லமே 

இதயம் என்னும் வீணையில் 
அன்பை மீட்டும் வேளையில் 
வசந்த ராகம் கேட்கவே 
ஏழை என்னில் வாருமே 
தந்தேன் என்னை தந்தேன் என்றும் 
என் வாழ்வு உன்னோடு தான் 

padaipu ellam umake sondham
naanum undhan kaivannam
kuyilkal paadum kilikal pesum
en vaazhvu isaikum un raagame

iyarkai unadhu ooviyam
inaiyillaadha kaaviyam
agilamennum aalayam
naanum adhil oor aagamam
ullam endhan ullam adhu
ennaalum un illame

idhayam ennum veenaiyil 
anbai meetum velaiyil
vasantha raagam kaetkave
aezhai ennil vaarume
thanthen ennai thanthen endrum
en vaazhvu unnodu dhaan

palipeedathil vaithen ennai

பலிபீடத்தில் வைத்தேன் என்னை 
பாவி என்னை ஏற்றுக் கொள்ளும் 

நிலையில்லா இந்த பூவுலகில் 
நித்தம் உன் பாதையிலே 
நின் சித்தம் போல் உம் கரத்தால் 
நித்தம் வழி நடத்தும் 

பரிசுத்தம் இல்லா இவ்வுலகில் 
பரிசுத்தமாய் ஜீவிக்க 
பரிசுத்தமான உம் இரத்தத்தால் 
பரிசுத்தமாக்கி விடும் 

palipeedathil vaithen ennai
paavi ennai aetru kollum

nilaiyila indha poovulagil
nitham un paathaiyile
nin sitham pol um karathaal
nitham vazhi nadathum

parisutham illaa ivvulagil
parisuthamaay jeevika
parisuthamaana um rathathaal
parisuthamaaki vidum

naangal tharugindra kaanikai

நாங்கள் தருகின்ற காணிக்கை இதை ஏற்றருள் தெய்வமே 
நாங்கள் தருகின்ற காணிக்கை 

நிலையற்ற உலகம் நிலையென நினைத்து
நிம்மதியின்றி வாழ்ந்து வந்தோம் 
கண்ணீர் பூக்களை உந்தன் பாதத்தில் 
காணிக்கையாக்கவே - இன்று 
உம்மை நாடினோம் 

வளமற்ற வாழ்வில் வசந்தத்தை தேடி 
பாவத்தை நாங்கள் அணிந்திருந்தோம் 
அன்பின் பாதத்தில் எந்தன் வாழ்வினை 
காணிக்கையாக்கவே - இன்று 
உம்மை நாடினோம் 

naangal tharugindra kaanikai idhai aetrarul dheyvame
naangal tharugindra kaanikai

nilaiyatra ulagam nilayena ninaithu nimmadhiyindri vaazhnthu vandhom
kaneer pookalai undhan paathathil kaanikai aakave indru ummai naadinom

valamatra vaazhvil vasanthathai thedi paavathai naangal aninthirunthom
anbin paathathil enthan vaazhvinai kaanikaiyaakkave indru ummai naadinom